Monday, March 15, 2010

சில நேரங்களில் என் காதல் கிறுக்கலாய்...


♥ கண்களாய்
உனை கேட்டால்
நீ
ஏனடி
கண்ணீரானாய்...♥♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உனக்கு
என்
எழுத்துக்கள்
கிறுக்கல்களாய்
இருக்கலாம்..
ஆனால்
எனக்கு
அது
எனக்குள்
இருக்கும்
நீ....♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உன்னை மறக்க
ஒரு நிமிடம் கேட்டால்..
என்னை இறக்க சொல்கிறாயே..
ஓ..
நான் இறப்பதும்
உன்னை மறப்பதும்
ஒன்றுதானோ...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
விட்டில்
பூச்சியாய்
சுற்றி சுற்றி
வருகிறேன்
அது
என் இறுதி
ஊர்வலம் என்று
தெரியாமல்...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
மரணம் ஒரு நாள்
அவஸ்தை...
காதல்
வாழ்நாள் அவஸ்தை...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அள்ள அள்ள
குறையாதது
அட்சயபாத்திரம் மட்டுமல்ல..
அவளின் அழகும்தான்...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

காதலும் நானும்...


♥ என்
காதலும்
காற்றும்
ஒன்றுதான்..
என்
கைகளுக்கு
கிடைப்பதும்
இல்லை
இது
இல்லாமல்
நான்
வாழ்வதும்
இல்லை..♥♥

/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

துடிக்கவா..??
உன்னை
நினைக்கவா??
என்று
கேட்டது
என்
இதயம்
ஏன் தெரியவில்லை
அதற்கு????
உன்னை
நினைக்கவே
அது
துடித்துக் கொண்டிருக்கிறது
என்று...

******************************