Monday, September 20, 2010

எப்போ திருந்தும் தமிழ் சினிமா??

என்னதான் தமிழ் சினிமா வளர்ந்துடுச்சு, நாங்க உலக சினிமா எடுக்கிறோம்னு பில்டப் கொடுத்துகிட்டாலும் அது 100ல ஒருபடம்தான் நல்ல படமா வருது… மீதி வர 99 படம் அரைச்ச மாவேதான்… நம்ம டைரக்டர் திருந்தி நல்ல படம் எப்போ எடுப்பாங்கன்னு ஒரு ஆதங்கத்துலதான் நாங்க இந்த கட்டுரையை எழுதுறோம். இது யாரையும் புண்படுத்தவோ, தனிபட்ட முறையில் காயப்படுத்தவோ அல்ல…

ஸ்கூல் போற பசங்க, ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போறவங்க, இவங்கதான் லவ் பண்ணவே பொறந்தமாதிரி உங்க கதைல எப்போ பார்த்தாலும் விடலைகள வச்சே காதலிக்க வைக்கிறீங்களே, இதை பார்த்துட்டு ஊர்ல படிக்கிற பசங்க எல்லாம் நமக்கும் ஒரு பிகர் சிக்காதான்னு சுத்திட்டு இருக்காங்களே… எல்லாத்துக்கும் காரணம் நீங்க தானே ??


இது வரைக்கு சினிமா ஆரம்பிச்ச காலத்துல இருந்து காதலை தவிர வேற எதாவது உருப்படியா சொல்லி இருக்கீங்களா?? அட காதலையாவது ஒழுங்கா சொல்லி இருக்கீங்களா?? வயசுக்கு வரது முன்னாடியே காதலிக்கிறது, 8 வயசுல டூயட் பாடறது இதெல்லாம் எந்த ஊர்ல சார், ஏன் ஊரை கெடுக்கிறீங்க?? பருத்தீவீரன், பூ, இந்த படங்கள்ல காதலிக்கும் போது நாயகிகளின் வயசு என்ன?? உங்க வீட்டு பெண் இந்த வயசுல காதலிச்சா நம்ம பொண்ணுக்கு காதலிக்கிற அளவுக்கு பக்குவம் இருக்குன்னு உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா??

சமீபத்தில்வந்த களவாணியில் ஸ்கூல் யூனிபார்ம் பொண்ணை லவ் பண்ற மாதிரி கதை, இந்திய சட்டமே 18வயதுக்கு மேல்தான் பெண்களின் திருமண வயதுன்னு சொல்லுது ஆனா நீங்க ஸ்கூல் போற பொண்ணுக்கு கல்யாணம் ஆகற மாதிரி படம் எடுக்கிறீங்க?? காதல் சொல்ல வந்தேனில் கல்லூரிக்கு செல்லும் முதலாமாண்டு மாணவன் தன்னோட சீனியர் பொண்ணை லவ் பண்றான். எப்போதான் ஒரு மெச்சூர்டான காதலை படம் எடுப்பீங்க?

ஏன் சார் உங்க கதைல நல்லவங்களுக்கு காதலே வராதா?? ரவுடி, பொறம்போக்கு, அடியாளு, வெட்டியா சுத்துறவன் இவனுங்களையா பார்த்து தேடி பிடிச்சு கதாநாயகிங்க லவ்வுறாங்களே இது சாத்தியமா? உங்க ஹீரோயின்கள் எல்லோரும் ரவுடிகளை லவ் பண்றதால நம்ம பசங்க எல்லோரும் நாங்களும் ரவுடிதான்னு ரவுசு விட்டு வாழ்க்கைய கெடுத்துக்கிறது உங்களுக்குத் தெரியுமா??

பார்த்ததும் லவ் பண்ணிட்டு, ஹீரோ நல்லவன் வல்லவன்னு அப்பன் கூட அவன் என்னை நல்லா புரிஞ்சவன் அவன் கூட இருந்தாதான் நான் சந்தோசமா இருப்பேன்னு வசனம் பேசுறது ஏன்?? ஹீரோயினை பார்த்ததும் லவ் பண்ணிட்டு உன்னை நான் உன் உடம்பை பார்த்து லவ் பண்ணலன்னு வசனம் பேசுறீங்களே ஹீரோ எப்படி? நீங்க இப்படி உசுப்பேத்துறத பார்த்து ஊருக்குள்ள பாதிப்பேர் பாத்ததும் வர்றதுதான் மச்சி லவ்ன்னு வசனம் பேசி வாழ்க்கைய கெடுத்துகிறாங்களே அதுக்கு காரணம் நீங்கன்னு ஒத்துப்பீங்களா?

எவ்ளோ பெரிய ரவுடியா இருந்தாலும் க்ளைமாக்ஸ் 4 நிமிசத்துல ஹீரோயின் பேசுற மொக்கை வசனத்துல திருந்துறாங்களே ஏன்?? சொந்த புத்தியே கிடையாதா??

குடும்பக் கதை எடுக்கிறேன்னு நீங்க கொல்றது அதுக்கு மேல, மூத்தவர் ரொம்ப நல்லவர், இளைவர் எதுக்குமே ஆகாதவர் இவர்தான் ஹீரோ, அண்ணன் நல்லா இருக்கவரைக்கும் இவர் திருந்தவே மாட்டார், அப்புறமே தனியா நின்னு குடும்ப மானத்தை காப்பத்துவார், குடும்பமே இவரைப்பாராட்டும்… இன்னும் எவ்ளோ நாளைக்கு??

ஊர்ல ஒரு பெரிய மனுசன் அவருக்கு பிள்ளையோ, தம்பியோ ஹீரோ, அந்த பெரிய மனுசன் போனதும் இவர் வில்லனை பழிவாங்குவார் உஷ்ஷப்பா… முடியல…

ஆட்டோ ஓட்ற ஹீரோ, வேலைப் பக்கம் தலை வச்சு கூட படுக்காத ஹீரோ, குடிசை வீடுதான் ஆனா ரேபான் கிளாஸ், ரீபக் சூ, ரேமண்ட் சர்ட் தான் போடுவாரு யோசிங்க டைரக்டர் சார். எந்த கதையா இருந்தாலும், ஆப்பம் விக்கிறவ, வெத்தலை விக்கிறவ, வேலைக்காரி, டீச்சர் இப்படி உங்க பலான மேட்டரை கொண்டு வந்து சொருவுறத எப்போ சார் நிறுத்துவிங்க??

பெண் புரட்சி, பெண்ணியம், என் கதாநாயகி புதுமை பெண் அப்படின்னு எல்லாம் பேசிட்டு ஹீரோயினுக்கு தம்மாதூண்டு டிரெஸ் போட்டு டூயட் பாட கூட்டிட்டு போயிடுவிங்க, அவ்ளோ நல்லவரா நீங்க??

இல்ல தெரியாமதான் கேட்கிறேன் ஹீரோவோட தங்கச்சிய வில்லன் கெடுத்துட்டான்னா ஹீரோ கெடுத்தவன்கிட்ட போய் என் தங்கச்சிய கட்டிகோங்கன்னு கெஞ்சி கேட்கிறத விட கேனத்தனம் எதும் இல்லன்னு உங்க மண்டைல ஏறாதா??

நீங்க பலான கதைய எடுத்து யாராவது கேள்வி கேட்டால் ஊர்ல நடக்கிறதைதானே எடுக்கிறோம்னு நியாயம் பேசுவிங்க, ஊர்ல மக்களுக்கு சொல்றது நல்ல விசயம் எதும் நடக்கிறதே இல்லையா என்ன???

எந்த படம் எடுத்தாலும் இது வரைக்கு தமிழ் சினிமாவுல யாருமே செய்யாத கதைன்னு சொல்வீங்க… ஆனா ஆயா வடை சுட்ட கதையவே எடுப்பீங்க… ஏன் சார்??

எப்படிங்க உங்க ஹீரோயின் ஊர்ல இருக்க எல்லோருக்கும் புத்தி சொல்லிட்டு ஒரு ரவுடிய, பொருக்கியா பார்த்து தேடி பிடிச்சு காதலிக்கிறீங்க? அதும் ஹீரோ பஸ்ல பக்கத்துல இருக்க பாட்டிக்கு சீட் கொடுத்ததும் உங்க ஹீரோயின் லவ்வை ஆரம்பிச்சுடுவாங்க எப்படிங்க??

ஒரு ஊர்ல 2 ப்ரெண்ட்ஸ் ஊர்ல வேற பொண்ணுங்களே இல்லாத மாதிரி 2 பேரும் ஒரே பொண்ணை லவ் பண்ணுவாங்க, கடைசியா பிரெண்ட் ஷிப் தான் மச்சின்னு 2 பேரும் லவ் பண்ண பொண்ணு வேணாம்னு முடிவு பண்ணுவாங்க, அடபாவிங்களா?

தயாரிப்பாளர்களே நீங்க பணம் சம்பாதிக்கணுங்கறதுக்காக படத்துல பலான விஷயங்களை சேர்க்க சொல்றது நியாயமா?? கேட்ட அது கதைக்கு ரொம்ப அவசியமான சீன் அப்படின்னு ஒரு டெம்ளேட் வசனம் வேற.. ஹீரோயின் நீச்சலுடைல வருவதும், எதிர் வீட்டு ஆண்ட்டி பெருக்குறத குனிஞ்சு பார்க்கிறதும் கதைக்கு ரொம்ப அவசியமா சார்??

நீங்க உலகத்துலயே முதன் முறையான்னு சொல்ற படமெல்லாம் உலக தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாகன்னுதான் ரிலீஸ் ஆகுது ஏன்னு எப்போவாவது யோசிச்சிருக்கீங்களா??

கடைசியா ரசிகர்களுக்கு :

நீங்க கொடுக்கிற காசுக்கு நடிக்கிறவங்கதான் சினிமா கூட்டம், அவங்க பண்ற தப்புக்கெல்லாம் ரசிகர்கள் அதைத்தான் விரும்புறாங்க அதனாலதான் எடுக்கிறோம்னு அவங்க உங்க மேல குற்றம் சொல்றாங்க, நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?? நல்ல படங்களை ஓட வைங்க, மசாலா குப்பைகளை தூக்கி எறிஞ்சா அவங்க அந்த மாதிரி படம் எடுக்கணும்னு நினைக்ககூட மாட்டாங்க..

இதெல்லாம் ரொம்ப சின்ன லிஸ்ட், இதுமாதிரி ஆயிரமாயிரம் கேள்விகள் உங்களுக்குள்ள இருக்கலாம்.

அதை கமெண்டா போடுங்க, அட்லீஸ்ட் இதெல்லாம் படிச்சு அடுத்து படம் எடுக்க போற ஒரு படைப்பாளி திருந்தினாலும் சந்தோசமே…

3 comments:

  1. செந்தில் .... நல்லா இருக்கு!!! தொடர்ந்து எழுதவும்!

    ReplyDelete
  2. நல்லா இருக்குன்னு சொல்லிடு பெயரை சொல்லாம போயிட்டிங்களே நண்பரே??

    ReplyDelete
  3. nice machi but romba length a poitu iruku. Ivalavu length a pona padikuravangaluku salipu vandhudum. Konjan sensor pannunga pa. But matter and presentation is good

    ReplyDelete