Monday, March 15, 2010

சில நேரங்களில் என் காதல் கிறுக்கலாய்...


♥ கண்களாய்
உனை கேட்டால்
நீ
ஏனடி
கண்ணீரானாய்...♥♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உனக்கு
என்
எழுத்துக்கள்
கிறுக்கல்களாய்
இருக்கலாம்..
ஆனால்
எனக்கு
அது
எனக்குள்
இருக்கும்
நீ....♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உன்னை மறக்க
ஒரு நிமிடம் கேட்டால்..
என்னை இறக்க சொல்கிறாயே..
ஓ..
நான் இறப்பதும்
உன்னை மறப்பதும்
ஒன்றுதானோ...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
விட்டில்
பூச்சியாய்
சுற்றி சுற்றி
வருகிறேன்
அது
என் இறுதி
ஊர்வலம் என்று
தெரியாமல்...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
மரணம் ஒரு நாள்
அவஸ்தை...
காதல்
வாழ்நாள் அவஸ்தை...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அள்ள அள்ள
குறையாதது
அட்சயபாத்திரம் மட்டுமல்ல..
அவளின் அழகும்தான்...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

No comments:

Post a Comment