Friday, October 15, 2010

மீண்டும் ராஜேஷ் குமாருடன் நான்..



நான் ஒரு காலத்தில் தினமும் ஒரு ராஜேஷ் குமார் நாவல் படிப்பேன்.. எப்போதும் ராஜேஷ் குமார் கையில் இருப்பார். காலேஜின் என்னை பாடப்புத்தகத்துடன் பார்த்தவர்களை விட பாக்யாவுடனும் க்ரைம் நாவலுடனும் பார்த்தவர்களே அதிகம். நான் இடையில் மற்ற எழுத்தாளர்களின் பரிச்சயத்திற்கு பிறகு என்னால் ராஜேஷ் குமாரை படிக்க முடியவில்லை..( முடியவில்லை என்பதுதான் உண்மை).. ஊரே காதலிக்கும் வயதில் காதல் என்றால் பிடிக்காத ராஜேஷ்குமாரை படித்து வந்திருக்கிறேன் என்ன கொடுமை இது..

காரணம் அவரின் நாவலில் கதை ஆரம்பிக்கும்போதே முடிவு என் மூலையை எட்டி விடுவதே இதற்கு காரணமாக இருந்தது. ஆனாலும் விவேக் ரூபலாவின் சல்லாப விளையாட்டுக்கள் இல்லாத அந்த துரத்தல் எனக்கு பிடிக்கும். கனேஷ் வஸந்த் வந்த பிறகு விவேக்- ரூபலாவை நான் கைவிட்டு விட்டேன் என்று சொல்லலாம்.

நேற்று முன்னாள் ஒரு கடை முன்பு பஸ்ஸுக்கு காத்திருக்கும் நேரம் அமைய, வழக்கமாக அந்த நேரத்தில் கையில் எப்போதும் புத்தகம் வைத்திருக்கும் நான் வெறும் கையுடன் இருந்த நேரம் அது. கடையில் எதாவது புத்தகத்தை வாங்க மனம் அரித்தது திடீரென்று ஆசை பழைய நண்ப எழுத்தாளர்களை படிக்கும் ஆசை வந்தது எனக்கு.. சுபாவையும் பி.கே.பி ஐயும் தேடினேன். காரணம் நீங்கள் அறியாததது அல்ல.. இவர்களின் நாவல்களில் கொஞ்சம் கில்மா அதிகமாக இருக்கும் என்பதுதான் அது..

இருவருடைய நாவல் இல்லாமல் போக ராஜேஷ் குமாரின் "ஆபத்துக்கு பாவம் இல்லை" என்ற நாவலை வாங்க வேண்டியதாக போனது. வழக்கம் போல இரு வேறு கதைகளாகவே ஆரம்பித்தது கதை.. ரயிலில் மீன் திருடும் இருவருக்கு மீன் கூடையில் மனித கை கிடைக்கிறது.. இவர்கள் போலீஸில் மாட்ட அதை துப்பறிய கிளம்புகிறது போலீஸ். இன்னொரு புறம் காதலித்து கல்யாணத்துக்கு முன்பு கர்ப்பமாகும் ஒரு ஜோடி கருகலைப்பு செய்யப் போக டாக்டரின் தவறால் அந்த பெண் இறக்கிறார். அதை ஆள் வைத்து மறைக்க நினைக்க அது டாக்டருக்கு வில்லங்கமாக முடிகிறது.

இப்படியே எதிர்பார்த்த திருப்பங்களுடன் செல்லும் நாவல் எனக்குள் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாமலே முடிந்து போனது. கதையை முடிச்சவிழ்க்க வரும் தொடர்பில்லாத கதாப்பாத்திரங்கள், எதிர்ப்பார்த்தே வரும் திருப்பங்கள்.. வழக்கம் போல காதல் எதிர்ப்பு, மோசமான டாக்டர்.. இன்னும் மாறவே இல்லை ராஜேஷ் குமார்.

அவர் மாறவில்லை.. ஆனால் நான் மாறிவிட்டேன்..

No comments:

Post a Comment