Tuesday, September 14, 2010

நன்றி மறந்த ஷங்கர்

10 வருடங்களுக்கு முன்பு எந்திரன் கதையை ஷங்கருக்கு கொடுத்தவர் சுஜாதா. கமல் செய்வதாக இருந்த ரோபோ, பிறகு ஷாருக்கான் வசம் போனது, அவருக்கும் ஷங்கருக்கும் தயாரிப்பில் பிரச்சனை வர, ஐங்கரனை வந்து சேர்ந்தது ரோபோ, ஷங்கரின் பட்ஜெட்டிலும் செலவிலும் ஆடிப்போன ஐங்கரன் கை விரித்து விட வேறு வழியே இல்லாமல் சன்னை தஞ்சமடைந்தார் ஷங்கர், இவ்வளவு மெனக்கெட்டிருந்தாலும் ஷங்கர் நன்றி மறந்தது நியாயமா??

மலேசியாவில் கேசட் வெளியிடும் போதே எதிர்ப்பார்த்தேன் இந்த படத்தில் சுஜாதாவின் பங்கை வெளிப்படுத்துவார்கள் என்று, ஆனால் யாரும் வாயே திறக்க வில்லை, சுஜாதா இறந்ததும், அவர் தனக்கு எந்திரனின் முழு ஸ்க்ரிப்டை முடித்து கொடுத்து விட்டார் அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது என்று சொ ன்ன ஷங்கர், படம் முடியும் போது மறந்தது ஏன்?

சன்பிச்சர்ஸ்க்கு இணை கிடையாது, ஷங்கர் தான் உலகின் உயர்ந்த டைரக்டர், ரஜினி உலகத்திலேயே ஒருத்தர்தான், எந்திரனில் வேலை பார்த்த லைட் மேன் கூட உலகில் சிறந்த லைட் மேன் என்ற ரேஞ்சுக்கு கிடைப்பவர்களூக்கு எல்லாம் ஜால்ரா தட்டுவதை பொழப்பாக வைத்திருக்கும் வைரமுத்து, சக எழுத்தாளனை மறந்தது ஏன்?? வைர முத்துக்கு மனசே கிடையாதா??

தாளாத நிலையிலும் சுஜாதா எந்திரனுக்காக எழுதினார் என்றது இவர் சொல்லியே எல்லோருக்கும் தெரியும் ஆனால், படம் முடிந்ததும் மறந்தது ஏன்??

சுஜாதா என்ற படைப்பாளியின் திறமை யை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பயன் படுத்திக்கொண்டவர் ஷங்கர், என்னதான் பிரம்மாண்டம் என்று படம் காட்டிகொண்டிருந்தாலும் சுஜாதாவின் கற்பனையே அதற்கெல்லாம் காரணமாக இருந்திருக்கிறது..

சுஜாதா போன்ற படைப்பாளி அருகில் இல்லையென்றால் இன்று எந்திரன் எடுக்கும் அளவுக்கு ஷங்கர் வளர்ந்திருக்க முடியாது. இன்றைக்கு எந்திரனுக்கு கிடைக்கும் அத்தனை எதிர்ப்பார்ப்புக்கும் மையமாக இருந்தவர் சுஜாதா.

எந்திரன் வெளிவந்து ஷங்கரின் இயக்கத்தை விட சுஜாதாவின் வசனங்களும் அவரது பங்களிப்பும் அதிகம் பேசப்படும் போது உணர்வார் ஷங்கர். கண்டீப்பாக இது நடக்கும்..


நறுமுகைக்காக

No comments:

Post a Comment