Monday, September 20, 2010

கண்ணதாசனின் நடந்த கதை..

நான் சமீபத்தில் முடித்த ஒரு நாவல், எனக்கு தெரிந்து நான் படித்த மோசமான நாவல்களில் ஒன்றாகதான் இதை கருதுகிறேன். எந்த உள்தேடலும் இல்லாமல் சாதாரணமாக ஒருதட்டு மக்கள் மேல் குற்றம் கூறி செல்கிறார் கண்ணதாசன் அதை என்னால் ஏற்க முடியாது. ஒரு பெண் விபச்சாரத்தையும் முறைகேடான உறவையும் விரும்பியே செய்வதாக சொல்கிறார். இந்த கதையின் நாயகன் மீது நமக்கு பரிதாபம் வரவேண்டும் என்பதற்காகவே கதையில் கதாநாயகன் சார்ந்த உறவுகளை கெட்டவர்களாக காட்டுவது எவ்விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

கதை என்றால் அப்படித்தான் எழுத்தாளனின் சுதந்திரத்தில் தலையிட கூடாது என்பதை நான் ஏற்கிறேன். அது எழுத்தாளன் சொல்லும் விசயம் சரியாகவும அது ஆராய்ந்தும் எழுதி இருக்கும் பட்சத்தில் விரும்பி விபச்சாரம் செய்வதாகவும், தந்தையுடன் தவறாக இருப்பதாகவும் சொல்லும் இவர் அந்த கதாபாத்திரத்தையும் சற்று பேச விட்டிருக்கலாம் காரணம் என்னவென்று தெரிந்திருக்கும்.

இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது எனக்குள் எவ்வித பாதிப்புமே நிகழவில்லை. மாறாக கண்ணதாசன் மீது சற்று கோபம்தான் வந்தது.

மேலும் ஒரு கடுப்பு, இது புது புத்தகமே 20ரூபாய் தான் இதை நான் பாரீஸில் பழைய புத்தக கடையில் 20 ரூபாய்க்கு வாங்கினேன்.

No comments:

Post a Comment